காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே வேளிங்கபட்டரை பகுதியில் உள்ள சந்திரமோகன் நகரைச் சேர்ந்த மோகன் இவர் பட்டு சேலை விற்பனை கடையை நடத்தி வருகிறார். இவர் இரு சக்கர வாகனம் வைத்துள்ளார். இவர் நேற்று தீபாவளி பண்டிகையையொட்டி குடும்பத்தாருடன் பட்டாசு வெடித்து கொண்டிருந்தார். இந்நிலையில் குட்டி சாரைப்பாம்பு இருசக்கர வாகனத்தில் இயந்திரத்தின் உள்ளே சென்றதை அறிந்த சங்கர் உடனடியாக நண்பரின் மகன் சமூக ஆர்வலர் மோகனுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த சமூக ஆர்வலர் மோகன் கீ போர்டு இசையில் ஆர்வம் கொண்டவர். சங்கர் கொடுத்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு மோகன் வந்து கீ போர்டு வாசித்து இருசக்கர வாகனத்தில் சென்ற சாரைப்பாம்பை லாவகமாக பிடித்து பிளாஸ்டிக் குடுவையில் அடைத்து ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் விட்டார்.



from Dinakaran.com |06 Nov 2021 https://ift.tt/3bHZoKR