சென்னை: சென்னை மாநகர மத்திய கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் எம்.ஸ்ரீராமன் வெளியிட்ட அறிவிப்பு: சென்னை மத்திய அஞ்சல் கோட்டத்தின், தி.நகர் தலைமை தபால் நிலையம் மற்றும் மயிலாப்பூரில் உள்ள தலைமை தபால் நிலையங்களில் தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு பார்சல் பேக்கிங் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இச்சேவையின் மூலம், வாடிக்கையாளர்கள் தங்கள் உறவினர்களுக்கு அனுப்ப விரும்பும் பரிசுப் பொருட்களை துரிதமாக அனுப்பி பயன்பெறலாம். இதற்காக வாடிக்கையாளர்கள், தாங்கள் அனுப்பும் பொருட்களை மட்டும் கொண்டு வந்து எங்களிடம் உள்ள பேக்கிங் வசதியை பயன்படுத்தி பேக்கிங் செய்து அனுப்பலாம். பார்சலின் எடைக்கு தகுந்தாற்போல் கட்டணம் வசூலிக்கப்படும். இதற்காக பிரத்தியேகமான பிரிவு மேலே குறிப்பிட்டுள்ள தபால் நிலையங்களில் உள்ளது. குறுஞ்செய்தி மூலமாக பார்சல் நிலை மற்றும் பட்டுவாடா செய்யப்பட்ட நிலை ஆகியவை தெரிவிக்கப்படும். இணையதளம் மூலம் பட்டுவாடா நிலையை கண்காணிக்கும் வசதியும் உண்டு. பொதுமக்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளலாம்.



from Dinakaran.com |30 Oct 2021 https://ift.tt/3CvlDiC