சென்னை:  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:  சட்டமன்ற காங்கிரஸ் முன்னாள் உறுப்பினர் லோகாம்பாள் மறைவு செய்தி அறிந்து மிகுந்த வருத்தமும், துயரமும் அடைந்தேன். சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை ஏற்று காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர். ஏழை, எளிய மக்களோடு நெருக்கமான தொடர்பு கொண்டிருந்து கட்சிப் பணியாற்றியவர்.அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.



from Dinakaran.com |30 Oct 2021 https://ift.tt/3nMUK3U