பல்லாவரம்: பல்லாவரம் அருகே பம்மல் பிரதான சாலையில் கமலேஷ் ஜெயின் (37) என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவரது கடைக்கு வந்த டிப்டாப் ஆசாமி, தனக்கு பெரிய தங்க செயின் வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து கமலேஷ் ஜெயின், தன்னிடம் இருந்த 6 தங்க செயின்களை அவரிடம் காட்டியுள்ளார்.  அவற்றை கழுற்றில் அணிந்து பார்த்துக் கொண்டிருந்த அந்த நபர், கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென நகையுடன் வெளியே ஓடியுள்ளார்.அங்கு, பைக்கில் தயாராக இருந்த மற்றொருவருடன் மின்னல் வேகத்தில் தப்பினார். தகவலறிந்தது சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வுசெய்து, தப்பியோடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர். கொள்ளையர்கள் திருடிய நகைகள் 30 சவரன் என்று கூறப்படுகிறது.



from Dinakaran.com |01 Nov 2021 https://ift.tt/2ZxN0tX