சென்னை: சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு 180 முதல் 220 வரை இருந்து வருகிறது. கொரோனா கண்டறியப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்படுபவர்கள் முறையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதில்லை என்பதே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. எனவே இனி கொரோனா தொற்று உறுதியானால் அவர்களை வீட்டில் தனிமைப்படுத்த வேண்டாம், நேரடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தனிமைப்படுத்திக் கொள்ளும் வசதி பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் உள்ளதா என்று ஆராய்ந்த பின்னர் தான் அவர்களை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



from Dinakaran.com |30 Sep 2021 https://ift.tt/3F6vVaH