சென்னை: பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் மதுரை,கோவை, திருச்சி, நெல்லை மற்றும் புதுவையில் உள்ள வானொலி நிலையங்களின் சொந்த நிகழ்ச்சி தயாரிப்பை இந்த மாதத்துடன் முடக்க பிரச்சார் பாரதி நிறுவனம் முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. இந்த வானொலி நிலையங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். பெரும்பான்மையினர் வேலையிழக்க நேரிடும். வானொலியை நம்பியுள்ள கலைஞர்கள் வாழ்வாதாரங்களை் இழந்து விடுவர். வேளாண் தொழில் சார்ந்த வழிகாட்டுதல் நிறுத்தப்பட்டால் உழவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்.மண்டல வானொலிகளின் நிகழ்ச்சிகளை முடக்கி விட்டு சென்னை வானொலி நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவது தவறு. எனவே, இந்த முடிவை பிரச்சார் பாரதி கைவிட வேண்டும். அவை வழக்கம் போல தொடர்ந்து செயல்பட உறுதி செய்ய வேண்டும்.



from Dinakaran.com |30 Sep 2021 https://ift.tt/3ilinyp