உத்திரமேரூர்: உத்திரமேரூர் போக்குவரத்து பணிமனையில், ஒன்றிய அரசை கண்டித்து போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உத்திரமேரூர் அரசு போக்குவரத்து பணிமனையில் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தொமுச நிர்வாகி து.சுந்தர் தலைமை தாங்கினார். இதில் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு, போக்குவரத்து துறையை தனியார் மயமாக்க கூடாது, வேளாண் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர்.



from Dinakaran.com |01 Sep 2021 https://ift.tt/2WGN89p