சென்னை: தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், காந்தி பேரவை தலைவருமான குமரி அனந்தன் நேற்று வெளியிட்ட அறிக்கை: குமரி முனையில் வான் புகழ் வள்ளுவர் சிலை நிற்கும் பாறைக்கும், விவேகானந்தர் மணி மண்டபம் இருக்கும் பாறைக்கும் இடையே நடைபாலம் வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றுவது என்று அறிவித்திருப்பது பெரிதும் பாராட்டிற்குரியது. சுற்றுலாப் பயணிகளுக்கு இது ஒரு வரப் பிரசாதமாகும். இதற்காக தமிழக அரசுக்கு பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



from Dinakaran.com |31 Aug 2021 https://ift.tt/3gNyq7v