தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதால், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தீவிர கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு அதிகமான ஆக்சிஜன், ஸ்டீராய்டு மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதன்மூலம் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திகுறைவதால், கரோனா தொற்றில் இருந்து குணமடைந்த பிறகு கருப்புபூஞ்சை நோயால் பாதிக்கப்படுகின்றனர். மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களைத் தொடர்ந்து தமிழகத்திலும் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்