தமிழகத்தில் தளர்வுகற்ற முழு ஊரடங்கு ஜூன் 7 வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் காய்கறி, பழங்கள் போல மளிகை பொருட்களும் இன்றுமுதல் வாகனங்களில் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் தினசரி பாதிப்பு 35 ஆயிரத்தை தாண்டியதைத் தொடர்ந்து, கடந்த மே 10-ம் தேதி முதல் சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின், மே 15-ம் தேதி தளர்வுகள் குறைக்கப்பட்டன. தொடர்ந்து மே 24-ம் தேதி முதல் தளர்வில்லா முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.இந்த ஊரடங்குக்கான காலம் இன்று காலை 6 மணியுடன் முடிவுக்கு வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்