அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது:

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட லக்காபுரத்தில் கடந்த 27-ம் தேதி கரோனா தடுப்பூசி முகாம் நடப்பதாக முன்களப்பணியாளர்களுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, அவர்கள் அங்கு சென்றுள்ளனர். ஆனால்,உள்ளே யாரும் அனுமதிக்கப்படவில்லை என்றும், பக்கவாட்டு வழியாக திமுக பிரமுகர்களின் உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் உள்ளிட்ட சிலர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டதாகவும், முன்களப் பணியாளர்கள் காவல்துறையினரால் அப்புறப்படுத்தப்பட்டு ஏமாற்றத்துடன் திரும்பியதாகவும் பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்