கரோனா பரவல் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு கடந்தஓரண்டாகவே கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணையவழியில் பாடங்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், சில தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஆன்லைன் வகுப்புகள் வழியே பாலியல் தொந்தரவு அளிப்பதாக மாணவிகள் பலர் வலைதளங்களில் புகார்களை பதிவு செய்துவருகின்றனர்.

இது தமிழகம் முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, இணைய வகுப்புகளை ஒழுங்குப்படுத்தி கண்காணிக்க தமிழக அரசு நிபுணர் குழுவை அமைத்துள்ளது. அதேநேரம், இந்த சிக்கலில் இருந்து மாணவர்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஒட்டுமொத்த சமூகத்துக்கும் உள்ளது என்ற கருத்தும் வலியுறுத்தப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்