தமிழ்நாடு ஸ்பாட் பரிஷத் நிறுவனம் சார்பில், அரசு ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைகளுக்கு தலா 100 படுக்கை வசதிகள், குளிர்சாதன வசதியுடன் கூடிய கரோனா சிகிச்சை மையங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இரும்பு மற்றும் ஸ்டீல் வியாபாரிகள் சங்கமான தமிழ்நாடு ஸ்பாட் பரிஷத் நிறுவனம் சார்பில், கரோனா பரவல் காலத்தில் அரசு மருத்துவமனைகளில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள உமேஷ் அகர்வால் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்