மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக முன்னாள் தேசிய தலைவருமான அமித் ஷாவை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்றிரவு சந்தித்து பேசினர். அப்போது நடந்த தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் 21 அல்லது 22 தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கப்படும் என அதிமுக தரப்பில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் தற்போதுள்ள 15-வது சட்டப்பேரவைக்கான பதவிக்காலம் வரும் மே 23-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதை முன்னிட்டு, சட்டப்பேரவை பொதுத்தேர்தல் அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியானது. அதில், வரும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 12-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கி 19-ம் தேதியுடன் நிறை வடைகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்