பெரம்பலூர் மாவட்டம் வேப்பூரைச் சேர்ந்தவர் பாண்டியன் மனைவி தனம்(50). இவர், தனது மகன் சக்திவேல்(22), மகள் பரமேஸ்வரி(26), பரமேஸ்வரியின் குழந்தைகள் செந்நிலா(3), தமிழ் நிலவன்(2),மற்றொரு மகள் பச்சையம்மாளின் மகள் நந்திதா(2) ஆகியோருடன் ஒரு இருசக்கர வாகனத்தில் கொளப்பாடியில் உள்ள பச்சையம்மாளின் வீட்டிலிருந்து நேற்று வேப்பூருக்கு புறப்பட்டுள்ளார். இருசக்கர வாகனத்தை சக்திவேல் ஓட்டியுள்ளார்.

வேப்பூர்- புதுவேட்டக்குடி சாலையில், இச்சிலிக்குட்டை அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வேப்பூரிலிருந்து புதுவேட்டக்குடி நோக்கி வந்த கார் இருசக்கர வாகனம மீது மோதி, அருகிலிருந்த சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்