பெண் கொலை வழக்கில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் போலீஸார் கொலையாளிகளை கைது செய்துள்ளனர். வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கிய தனிப்படை போலீஸாரை காவல் ஆணையர் பாராட்டியுள்ளார்.

சென்னை, அமைந்தகரை வெள்ளாளர் தெருவைச் சேர்ந்தவர் ஜெயந்தி (45). இவர் தனது மகள் மோனிகாவுடன் (24) வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 26-ம் தேதி ஜெயந்தி மற்றும் மோனிகா வீட்டில் தனியாக இருந்தபோது 25 வயது மதிக்கத்தக்க இரண்டு நபர்கள் கத்தியுடன் வீட்டில் நுழைந்து ஜெயந்தியின் தலை மற்றும் முதுகிலும், மோனிகாவின் கையிலும் கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்