கல்பாக்கம் அணுமின் நிலைய சுற்றுவட்டார 14 கிராமப் பகுதிகளில் குறிப்பிட்ட சர்வே எண்களில் உள்ள நிலங்களை பத்திரப்பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், பேரிடர் காலங்களில் பொதுமக்களை வெளியேற்றுவதில் சிரமம் ஏற்படும் என்பதால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் சென்னை அணுமின் நிலையம், இந்திரா காந்தி மற்றும் பாபா அணு ஆராயச்சி மையம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. அணுமின் நிலைய பாதுகாப்பு மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளின் பாதுகாப்பு கருதி குடியிருப்பு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகளை கண்காணிப்பதற்காக கதிரியக்க பகுதி உள்ளூர் திட்ட குழுமம் (நிலா கமிட்டி) ஏற்படுத்தப்பட்டுள்ளது. நிலா கமிட்டியின் உறுப்பினர் செயலராக திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலர் பரிமளா செயல்படுகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்