தமிழ்நாட்டில் 4,474 தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் உள்ளன. இங்கு சிறு தவணை கடன் பெறுவோர் 2 முதல் 15 மாதங்களில், நடுத்தர தவணை கடன்கள் பெறுவோர் 3 முதல் 5 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்துதல் வேண்டும்.

விவசாயிகளுக்கு பயிர்க் கடன்தளை கொடுப்பது தான் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியின் முக்கியப் பணியாகும். விழுப்புரத்தில் கடந்த நவம்பர் 6-ம் தேதி செய்தியாளர்களிடையே பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, “அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ. 5,319 கோடி கடன் தள்ளுபடி செய்துள்ளது. பழனிசாமி முதல்வரான பின்பு ரூ. 29,817 கோடி பயிர்க் கடன் தரப்பட்டுள்ளது. கடந்தாண்டை விட நடப்பாண்டில் கூடுதலாக ரூ.832 கோடி கடன் கொடுக்கப்பட்டு உள்ளது” என்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்