கோவை மாநகரின் இதயப் பகுதியாக உள்ள அவிநாசி சாலையில், உப்பிலிபாளையத்தில் தொடங்கி சின்னியம்பாளையம் வரை சுமார் 12 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஏராளமான குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள் உள்ளன. காந்திபுரத்தில் இருந்து ஈரோடு, சேலம், சென்னை, புதுவை உள்ளிட்ட இடங்களுக்குச் செல்வதற்கு இச்சாலை முக்கியமானதாக உள்ளது. இச்சாலை வழியாக தினமும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

6 வழிப் பாதையான இச்சாலையில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, உப்பிலிபாளையத்தில் இருந்து கோல்டு வின்ஸ் வரை 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு, ரூ.1,620 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டும் பணி, மாநில நெடுஞ்சாலைத் துறையினரால் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்