சசிகலா விடுதலையானதால் சுதந்திரப் பறவையாக மாறிவிட்டார். இனி முடிவுகளை அவரே எடுப்பார் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: எங்கள் தேசியத் தலைவர் எடுக்கும் கூட்டணி முடிவுதான் எங்களின் முடிவும். காந்தியே ராமராஜ்யம் வேண்டுமென்று விரும்பினார். அதனால்,தமிழக மக்கள் அனைவரும் அயோத்தியில் ராமர் கோயில் அமைப்பதற்கு நிதி உதவி வழங்க வேண்டும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்