முதல்வர் பழனிசாமியின் வேண்டுகோளை ஏற்று, பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 14-ம் தேதி சென்னை வர உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தின் பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி, நிதி கோருவது தொடர்பாக டெல்லி சென்ற முதல்வர் பழனிசாமி கடந்த 19-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, ‘‘காவிரி - குண்டாறு இணைப்பு, கல்லணை சீரமைப்பு, பவானி ஆற்றை நவீனப்படுத்தும் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ வரையிலான மெட்ரோ ரயில் சேவை, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தூத்துக்குடி எரிவாயு திட்டம் ஆகிய திட்டங்களின் தொடக்க விழாவுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தேன். அவரும் வருவதாக ஒப்புக்கொண்டுள்ளார்’’ என்று தெரிவித்திருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்