சென்னையில் தவறாமல் வரி செலுத்துபவர்களை கவுரவிக்க, மாநகராட்சி முடிவுசெய்துள்ளது. இதற்காக, மண்டல வாரியாக பட்டியல் தயாரித்து பாராட்டு சான்றிதழ் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு சொத்து வரி, நிறுவனங்களிடம் இருந்து தொழில் வரி உள்ளிட்டவை வசூலிக்கப்பட்டு வருகின்றன. 6 மாதங்களுக்கு ஒருமுறை வரி செலுத்த வேண்டும். சொத்து வரி, தொழில் வரி உள்ளிட்டவற்றை முறையாக செலுத்தாதவர்களுக்கு நோட்டீஸ் வழங்கி வரியை வசூல் செய்யும் பணிகளில் சென்னை மாநகராட்சியின் வருவாய் துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சொத்து வரி, தொழில் வரி உள்ளிட்டவற்றை தவறாமல் செலுத்துபவர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்க சென்னை மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்