தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெறு கிறது. 70 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்குவதற்காக 43 ஆயிரம் மையங்கள் அமைக் கப்பட்டுள்ளன.

இந்தியா முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன் வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங் கள், சோதனைச் சாவடிகளிலும் சொட்டு மருந்து வழங்க நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொலைதூர பகுதிகளுக்காக நடமாடும் குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்