சென்னை: தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கியது. இன்று மாலை 5 மணி வரை 43,051 முகாம்களில் போலியோ சொட்டு மருந்து போடப்படுகிறது. மருத்துவமனை, சுகாதார நிலையம் உள்ளிட்ட இடங்களில் 70.26 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து தர இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



from Dinakaran.com |31 Jan 2021 https://ift.tt/3colxiD