தேர்தல் பணிகள் குறித்து தேமுதிகபொறுப்பாளர்களுடன் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். கூட்டணி குறித்த முக்கிய அறிவிப்பை கட்சித் தலைவர் விஜயகாந்த் ஓரிரு நாளில் வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் விரைவில் நடக்க உள்ள சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. பல கட்சிகள் பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டன. தேமுதிகவும் 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான பொறுப்பாளர்களை நியமித்து, தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிக நீடித்தாலும்,இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. வரும் தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் தொடர நினைக்கும் தேமுதிக 41 இடங்களை கேட்டுள்ளதாகவும், அதிமுக தரப்பில் 15 இடங்கள் வரை மட்டுமே ஒதுக்க சம்மதிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், இந்த கூட்டணி தொடருமா என தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் குழப்பம் நீடித்து வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்