நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் டோக்கன்களுக்கு மட்டுமே வரும் 4-ம் தேதி முதல் பொங்கல் தொகுப்பு, ரொக்கத் தொகை வழங்கப்பட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்களுக்கு உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையர் சஜ்ஜன் சிங் ரா சவான் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.2,500 ரொக்கம் மற்றும் அரிசி, சர்க்கரை உள்ளிட்டவை அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இதைத் தொடர்ந்து அரசாணை பிறப்பிக்கப்பட்டு, ஒரு நாளுக்கு 200 குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் வகையில் கடந்த 26-ம் தேதி முதல் வீடு வீடாக டோக்கன் வழங்க உத்தரவிடப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்