கரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் உள்ள வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 68 ஆயிரத்தில் இருந்து 95 ஆயிரமாக உயர்த்தப்பட உள்ளது. இதற்காக கூடுதல் வாக்குச்சாவடி மையங்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் அடுத்த ஆண்டு நடக்கஉள்ளது. இதையொட்டி, கடந்த நவம்பர் 16-ம் தேதி முதல் டிசம்பர்15-ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது பெறப்பட்ட 23 லட்சத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்