தீயணைப்புத் துறை இயக்குநர் ஜாபர்சேட் பணி ஓய்வு பிரிவு உபசார விழா நேற்று நடைபெற்றது.

தீயணைப்புத் துறை இயக்குநராக இருந்து பணி ஓய்வு பெற்ற ஜாபர்சேட் பிரிவு உபசார விழா சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. டிஜிபி ஜே.கே.திரிபாதி கலந்து கொண்டு ஜாபர்சேட்க்கு நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினார்.
பின்னர் ஜாபர்சேட் பேசும்போது, “35 ஆண்டுகால காவல் துறை பணியில் சட்டம் - ஒழுங்கு, ஆயுதப் படை, உளவுப் பிரிவு, சிபிசிஐடி, தீயணைப்புத் துறை, பாதுகாப்புப் பிரிவு என அனைத்து பிரிவுகளிலும் பணிபுரிந்த நான் காணாத உயரமும் இல்லை, காணாத வீழ்ச்சியும் இல்லை. என் கரங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்து காயப்பட்டிருக்கிறதே தவிர, யாரையும் கெடுத்ததில்லை. காவல் துறை பணி என்பது மிகவும் கடினமானது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்