சிபிஐ பராமரிப்பில் லாக்கரில் இருந்த 103 கிலோ தங்கம் மாயமான விவகாரம் குறித்து சுரானாநிறுவனத்தின் முன்னாள் இயக்குநரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தங்கம் இறக்குமதியில் மோசடி நடந்ததாக கூறி, சென்னை என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள சுரானா நிறுவனத்தில் சிபிஐ அதிகாரிகள் கடந்த 2012-ம் ஆண்டு சோதனை நடத்தி, 400 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல்செய்யப்பட்ட 400 கிலோ தங்கமும்,சுரானா நிறுவனத்தில் உள்ள 72லாக்கர்களில் வைத்து சீல் வைக்கப்பட்டது. லாக்கர் சாவிகளும், தங்கம் பறிமுதல் தொடர்பான பட்டியல் ஆவணமும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்