புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் மெரினா, பெசன்ட்நகர் உள்ளிட்ட கடற்கரைகளுக்கு புத்தாண்டு கொண்டாட யாரும் வர வேண்டாம் என்றும் மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் எச்சரித்துள்ளார்.

ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் வகையில் ஆண்டுதோறும் டிச.31-ம் தேதி இரவு மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் திரள்வார்கள். நட்சத்திர ஓட்டல்கள், கேளிக்கைவிடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டும். நடன நிகழ்ச்சிகளும் நடைபெறும். காவல் ஆணையரும் மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே கேக் வெட்டி பொது மக்களுக்கு வழங்குவார். இந்த ஆண்டு கரோனா தொற்றை தடுக்கும்வகையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை, பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்