இறந்தவரின் பெயரில் போலியான ஆவணங்கள் தயார் செய்து ஆஸ்திரேலியாவில் வசிப்பவரின் ரூ.4 கோடி மதிப்புள்ள சொத்தை அபகரித்ததாக 2 பேரை அடையாறு போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை, கிழக்கு தாம்பரம், திருமங்கை மன்னர் தெருவில் வசிப்பவர் சுவாமிநாதன் (65). இவர் அடையாறு காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் அண்மையில் புகார் மனு ஒன்று அளித்தார். அதில், அவர் கூறியிருப்பதாவது: ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் நிர்மலின் சந்திரிகா ப்யூட்லர் என்பவருக்கு சொந்தமான ரூ.4 கோடி மதிப்புள்ள மனை அடையாறு, கஸ்தூரிபாய் நகர், 3-வது குறுக்குத் தெரு, தனலட்சுமி அவென்யூவில் உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்