கோயம்பேடு சந்தையில் 7 மாதங்களுக்கு பிறகு சில்லறை விற்பனை காய்கறி கடைகள் நேற்று திறக்கப்பட்டன.

கோயம்பேடு சந்தையில் கரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 28-ம் தேதி, அங்குள்ள சில்லறை காய்கறி மற்றும் பழக் கடைகள் மூடப்பட்டன. மொத்த காய்கறி மற்றும் பழக்கடைகள் மட்டும் செயல்பட்டு வந்தன. கரோனா மேலும் அதிகரித்ததைத் தொடர்ந்து மே 5-ம்தேதி சந்தை வளாகம் முழுவதும் மூடப்பட்டது. காய்கறி சந்தை திருமழிசைக்கும், பழச் சந்தை மாதவரம் பேருந்து நிலையத்துக்கும் தற்காலிகமாக மாற்றப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்