உதயம்பாக்கம் - படாளம் இடையே பாலாற்றில் ரூ.270 கோடி செலவில் கதவணையுடன் கூடிய தடுப்பணை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட உள்ளதாகவும் பாலாறு கீழ் வடி நிலக் கோட்டம் தெரிவித்துள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு வண்டலூரில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பாலாற்றில் 7 தடுப்பணைகள் அமைக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இதன்படி வாயலூர், வள்ளிபுரம் பகுதிகளில் தடுப்பணைகள் அமைக்கப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்