சென்னை புறநகரில் பெய்த கனமழையால் சிக்கராயபுரம் கல் குவாரிகளில் 50 சதவீதம் நீர் நிறைந்துள்ளது. தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கத்துக்கு இணையாக இதை மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை மாநகருக்கு மாதம் ஒரு டிஎம்சி நீர் தேவை. தற்போது சென்னைக்கு முக்கிய நீராதாரமாக உள்ள செம்பரம்பாக்கம் உள்ளிட்ட 4 ஏரிகளில் 11 ஆயிரத்து 257 மில்லியன் கன அடி நீரை தேக்க முடியும். இதில் நீர் ஆவியாதல் போன்ற சிக்கல்களும் உள்ளன. அதனால் சென்னை மாநகரின் நீர்த்தேவையை பூர்த்தி செய்ய கூடுதல் நீர்த்தேக்கங்கள் தேவை. இதன் காரணமாகவே திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ரூ.380 கோடியில் கண்ணன்கோட்டை- தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அரை டிஎம்சி (500 மில்லியன் கன அடி) நீரை சேமிக்க முடியும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்