பல்லாவரம் பெரிய ஏரியை, உலக வங்கி நிதியுடன் ரூ.15 கோடி மதிப்பீட்டில் சீரமைத்தும்கூட, அதில் மீண்டும் கழிவுநீர் கலப்பதாக இப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

பல்லாவரம் - துரைப்பாக்கம் சாலையால் 2 பகுதிகளாக பிரிந்து கிடக்கும் பல்லாவரம் பெரிய ஏரியின் ஒருபகுதியில், நகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. பல ஆண்டுகளாக துார்வாரப்படாமல் இருந்த இந்த ஏரி உலக வங்கி நிதி ரூ.14.98 கோடி மதிப்பீட்டில் துார்வாரி ஆழப்படுத்தி, கரையை பலப்படுத்தி, கருங்கற்கள் பதித்து, மதகு அமைத்து, கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையில் அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்