போலி ஆவணங்கள் மூலம் வாகனக் கடன் பெற்று பல்வேறு வங்கிகளில் ரூ.3.86 கோடி வரை மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்டவர் பிரபல கார் பந்தய வீரர் என்பது தெரியவந்துள்ளது.

சென்னை வேளச்சேரியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மேலாளர் தில்லை கோவிந்தன், சமீபத்தில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்திருந்தார். ‘சென்னையில் உள்ள பல்வேறு பொதுத் துறை வங்கிகளில் போலி ஆவணங்களை கொடுத்து, வாகனக் கடன்கள் மூலம் சொகுசு கார்களை பெற்று, வாகனக் கடனையும் செலுத்தாமல் 2 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள கும்பலை கைது செய்ய வேண்டும்’ என்று அதில் குறிப்பிட்டு இருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்