வேலூர் மாவட்டம் குடியாத்தம் கவுன்டன்யா ஆற்றில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆற்றில் யாரும் இறங்கி குளிக்க வேண்டாம் என அரசு எச்சரித்துள்ளது.

இந்நிலையில், குடியாத்தம் போடிப்பேட்டை கோபால் நகர் பகுதியைச் சேர்ந்த யுவராஜ், இவரது மனைவி நதியா(31). மகள்கள் நிவிதா(11), ஹர்ஷினி(8) ஆகியோர் கவுன்டன்யா ஆற்றின் கரையோரத்தில் வசித்து வருகின்றனர். நேற்று பிற்பகல் வெள்ளநீரை பார்ப்பதற்காக நதியா, தனது 2 மகள்களுடன் கவுன்டன்யா ஆற்றங்கரையோரத்துக்கு சென்றுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்