கோயம்பேடு சந்தையில் பெரும்பாலான காய்கறிகளின் விலை குறையாமல் உயர்ந்தே நீடித்து வருகிறது. எல்லா காய்கறிகளும் கிலோ ரூ.20-க்கு மேல் விற்பனையாகி வருகின்றன.

திருமழிசையில் காய்கறி சந்தை தற்காலிகமாக இயங்கி வந்ததால், அங்கு இருப்பு வைக்க போதிய இடவசதி இல்லை. இதன் காரணமாக காய்கறிகள் அளவோடு வரவழைத்து விற்பனை செய்யப்பட்டு வந்தன. இதனால் காய்கறி விலை உயர்ந்திருந்தது. கூடுதல் நேரம் செலவிட்டு, கூடுதல் தூரம் பயணித்து சில்லறை வியாபாரிகள் காய்கறிகளை வாங்கி வந்ததால், அவர்களும் விலையை ஏற்றி விற்றனர். இதனால் காய்கறி செலவு பொதுமக்களுக்கு பெரும் சுமையாக இருந்தது. இதற்கிடையே காய்கறி சந்தை கோயம்பேட்டில் மீண்டும் திறக்கப்பட்டு ஒரு மாதத்துக்கு மேல் கடந்துவிட்ட நிலையில், அங்கு காய்கறிகளின் விலை குறையவில்லை. பெரும்பாலான காய்கறிகள் கிலோ ரூ.20 மேல் விற்பனை செய்யப்படுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்