தஞ்சாவூர் அருகே வல்லத்தில் தனியார் வங்கியில் வாங்கிய வீட்டுக் கடனை திரும்ப செலுத்த கால அவகாசம் வழங்காததால், வங்கிக் கிளை முன்பு தீக்குளித்த இளைஞர் நேற்று உயிரிழந்தார்.

தஞ்சாவூர் அருகே உள்ள வல்லம் வள்ளலார் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த்(38). வெல்டரான இவர் வல்லத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் வீடுகட்டுவதற்காக கடந்த 2015-ல் ரூ.9 லட்சம் கடன் வாங்கியிருந் தார். இந்நிலையில், கடன் தொகையில் சில தவணைகளை ஆனந்த் செலுத்தவில்லை என்று கூறி, அவரது வீட்டை ஏலம் விடுவதற்கான நோட்டீஸை வங்கி நிர்வாகம் வழங்கியதாக தெரிகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்