பிரதமரின் கிசான் நிதியுதவித் திட்ட முறைகேடு தொடர்பாக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் விசாரணை நடந்து வரும் நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 75 ஆயிரம் வங்கிக் கணக்குகளை முடக்க வேளாண் துறையினர் மாவட்ட நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

பிரதமரின் கிசான் நிதியுதவித் திட்டத்தில் வறுமையில் வாடும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஒரு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வரவு வைக்கப்படுகிறது. இத்திட்டத்தில், ஆன்லைன் மூலம் விவசாயிகள் அல்லாதோரும் சேர்ந்து இந்த நிதியை பெறுவதாக புகார் எழுந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்