இலங்கையில் இருந்து ராமேசுவரத்துக்குக் கடத்த முயன்ற 5.5 கிலோ தங்கக் கட்டிகளை அந்நாட்டுக் கடற்படையினர் பறிமுதல் செய்து 2 மீனவர்களைக் கைது செய்தனர்.

இலங்கை வடக்கு யாழ்ப்பாணம் காங்கேசன் கடற்பகுதியிலிருந்து அனலை தீவு அருகே நேற்று அதிகாலை இலங்கைக் கடற்படையினர் ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக வந்த பைபர் படகை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் படகில் இருந்த நபர்கள் ராமேசுவரத்துக்கு தங்கம் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்