தஞ்சாவூர் அருகே தனியார் வங்கி முன்பு தீக்குளித்து இறந்த வெல்டிங் தொழிலாளியின் கடன் நிலுவை ரூ.6.94 லட்சத்தை தள்ளுபடி செய்து, அவரது குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வங்கித் தரப்பில் நேற்று உறுதியளிக்கப்பட்டது.

தஞ்சாவூர் அருகே வல்லம் வள்ளலார் நகரைச் சேர்ந்தவர் ஆனந்த்(40). வெல்டிங் தொழிலாளி. வல்லத்தில் உள்ள தனியார் வங்கியில் ரூ.9 லட்சம் வீட்டுக் கடன் பெற்றிருந்த இவர், நிலுவை தொகை ரூ.6,94,287-ஐ நீண்ட நாட்களாக செலுத்தாமல் இருந்ததால் அவரது வீட்டை ஏலம் விடப்போவதாக வங்கி நிர்வாகம் நோட்டீஸ் அளித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்