புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி கரோனா சிறப்பு வார்டில் ஆக்சிஜன் சப்ளை பாதிப்பால் ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்ததாக புகார் எழுந்த நிலையில், இதுகுறித்து விளக்கம் கேட்டு 2 மருத்துவர்கள் உட்பட 7 பேருக்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 70 வயதுக்கு மேற்பட்ட 2 ஆண்கள் மற்றும் 1 பெண் என மொத்தம் 3 பேர் ஆக.22-ம் தேதி உயிரிழந்தனர். இந்த வார்டில் ஆக்சிஜன் விநியோகத்தில் ஏற்பட்ட திடீர் பாதிப்பே அவர்களது உயிரிழப்புக்கு காரணம் என புகார் எழுந்தது. மேலும், நோயாளிகளின் ‘கேஸ் ஷீட்’கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்பதும், பணி நேரத்தில் பணியாளர்கள் சிலர் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்