மூடப்பட்டுள்ள சுற்றுலா தலங்கள் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் திறக்கப்படும் என நம்பிக்கை கொண்டிருந்த நிலையில்,31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்துள்ளதால், வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்துள்ளதாக சுற்றுலா சார்ந்த தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மாமல்லபுரத்தில் ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் சுற்றுலா சீசன் களைகட்டி காணப்படும். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கூட்டம், கூட்டமாக வந்து தங்கி செல்வர். சுற்றுலா பயணிகளுக்கு கலைச் சின்னங்களின் வரலாற்று தகவல்களை விவரித்து சுற்றுலா வழிகாட்டிகள் வருவாய் பெற்று வந்தனர். மேலும், கடல் சார்ந்த சிப்பி, சங்கு மற்றும் பல்வேறு கைவினை பொருட்களை தயாரித்து சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்து நரிக்குறவர்கள் உள்ளிட்ட சிறு வியாபாரிகள் வருவாய் பெற்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்