சென்னை:  காஞ்சிபுரம் மாவட்டம் காரப்பேட்டையில் பேரறிஞர் அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை ஆராய்ச்சி நிலையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், தேசிய நல்வாழ்வு குழும இயக்குநர் தாரஸ் அகமது, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்த்தி, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் மற்றும் மருத்துவ அதிகாரிகள் உடன் சென்றனர்.பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: இன்று 8வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. தீபாவளிக்கு அடுத்த நாள் அரசு விடுமுறை, தொடர்ந்து வெள்ளி, சனி, ஞாயிறு என்கிற அளவிலான விடுமுறை காரணமாக தடுப்பூசி முகாமை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைக்கலாம் என்று பல்வேறு ஊழியர்கள் சங்கங்கள், அலுவலர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இந்நிலையில் இன்று நடைபெற இருந்த தடுப்பூசி முகாம் அடுத்த ஞாயிற்றுக்கிழமை 14ம் தேதி நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார்.



from Dinakaran.com |06 Nov 2021 https://ift.tt/3wkmdxy