சென்னை: கோயம்பேடு பேருந்துநிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விடுதலைப் போரில் தமிழகம் என்ற தலைப்பிலான புகைப்பட கண்காட்சி, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டு கொண்டாட்டங்களை ஒட்டி தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் விடுதலைப் போரில் தமிழகம் என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சியை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 1ம் தேதி திறந்து வைத்தார். 1 முதல் 8ம் தேதி வரை ஒருவார காலத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்படுகிறது.‌ வரும் நவம்பர் 14ம் தேதி வரை பொதுமக்கள் பார்வையிட ஏதுவாக காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். பொதுமக்கள் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் இளைஞர்கள் என அனைவரும் இலவசமாக கண்டுகளிக்கலாம்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



from Dinakaran.com |06 Nov 2021 https://ift.tt/3o5MKLp