திருவொற்றியூர்: திருவொற்றியூர் டி.கே.எஸ் நகர், மணலி விரைவு சாலையோரம் நேற்று குப்பையை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். அப்போது, எர்ணாவூரிலிருந்து சத்தியமூர்த்தி நகர் நோக்கி வந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து, தூய்மை பணியாளர்கள் மீது மோதியது.  இதில், எண்ணூரை சேர்ந்த நிர்மலா (36), சம்பவ இடத்திலேயே இறந்தார். திருவொற்றியூரை சேர்ந்த ரதி அம்மாள் (50) படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்தார். அவரை  சக ஊழியர்கள் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.



from Dinakaran.com |01 Nov 2021 https://ift.tt/3Ex09mm