திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த வெள்ளதுகோட்டை பகுதியை சேர்ந்தவர் கேசவன்(28). தனியார் தொழிற்சாலை வாகன ஓட்டுனர். இவர் நேற்று காலை திருவள்ளூர் அடுத்த நுங்கம்பாக்கம் கிராமத்தில் இருந்து ஸ்ரீபெருமந்தூர் தனியார் தொழிற்சாலைக்கு தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்தில் சென்றார். அப்போது திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் போலிவாக்கம் கிராமம் அருகே சென்றபோது முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்றார். அப்போது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து எதிரே உள்ள புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 16 பெண்கள் உள்ளிட்ட 20 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.



from Dinakaran.com |31 Oct 2021 https://ift.tt/3CqmCAN