தாம்பரம்: பல்லாவரம் தொகுதிக்கு உட்பட்ட அனகாபுத்தூர், பம்மல், பொழிச்சலூர், திருநீர்மலை ஆகிய பகுதிகளில் போதிய டிரான்ஸ்பார்மர்கள் இல்லாததால் குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டு வீடுகளில் உள்ள மின்விசிறி, மிக்சி, கிரைண்டர், டிவி, மின்விளக்குகள் உள்ளிட்ட மின்சாதனங்கள் பழுதடையும் நிலை ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதாக பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, சட்டமன்ற தேர்தலின்போது உறுதி அளித்தார். அதன்படி, தொகுதி முழுவதும் 63 இடங்களில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் 100 கிலோ வாட்ஸ் டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டது. முதற்கட்டமாக 7 இடங்களில் அவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், திமுக நிர்வாகிகள், மின்வாரிய அதிகாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



from Dinakaran.com |01 Nov 2021 https://ift.tt/3BwJ6Pa