பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் மாநில செயலாளர் மற்றும் மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமையில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கொரோனா தடுப்பு பணியில் உயிரிழந்த வருவாய்த்துறை அலுவலர்களின் குடும்பங்களுக்கு அரசு அறிவித்த படி ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க கோரியும், கருணை அடிப்படையிலான நியமனதாரர்களின் பணியினை அரசாணையின்படி வரன்முறைபடுத்திட, ஒருங்கிணைந்த பணி முதுநிலை பட்டியல் தொடர்பாக அரசு மட்டத்தில் திருத்திய தெளிவுரைகள் உடன் வழங்கி நிரந்த தீர்வு காண வேண்டும் என வலியுறுயும். இதுபோன்ற இன்னும் சில கோரிக்கைகளை முன் வைத்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



from Dinakaran.com |01 Oct 2021 https://ift.tt/3usVEW2